ஸ்ரீ கிருஷ்ணர் லோகத்தில் தனது பணி முடிவடைததும் வைகுண்டம் சென்றார். அப்பொழுது ஸ்ரீ அர்ஜுனன் மிகவும் கவலையுடன் வியாசரை அணுகினார்." ஸ்ரீ கிருஷ்ணர் வைகுண்டம் சென்று விட்டாரே , இனி பூமியின் கதி என்ன" என்று கேட்டார்.அவர் சதுர் யுக தருமங்களைப்பற்றி கூறி கலியுகதைப்பற்றி கூறினார். "கிருத யுகத்தில் தானமும் தபசும் ,த்ரேதா யுகத்தில் ஞானமும் த்வாபர யுகத்தில் யாகமும் மோட்சத்தை கொடுத்தது . கலியுகத்தில் தானமே மோட்சத்தை கொடுக்கும் சாதனமாகும். கிருத யுகத்தில் பிரம்மாவும் ,த்ரேதா யுகத்தில் சூரியனும் த்வாபர யுகத்தில் விஷ்ணுவும் பூஜிக்கப்பட்டனர். கலி யுகத்தில் பரமசிவனே பூஜிக்கத்தகுந்த தேவனாவார். கலியில் மத ஆசாரங்களை எவரும் பின்பற்ற மாட்டார்கள். நோய் அதிகமாகும். வேதத்தை மறந்து விடுவார்கள்.யாகம் செய்ய மாட்டார்கள். தானம் செய்ய மாட்டார்கள். மழை இருக்காது. பொய்யும் திருட்டும் அதிகமாகும். பெண்களின் கற்பு குறைந்து விடும். சாபட்டுக்கடைகள் பெருகியிருக்கும்.காஷாயம் தரித்தவர்கள் உலகை ஏமாற்றுவார்கள் .உத்தமமான வர்ணத்தினர் தாழ்தவர்களுக்கு பணிவிடை செய்வார்கள்.பக்தியில்லாத பாட்டுக்கள் அதிகரிக்கும். கர்மாக்களை தூஷித்து போலி வேதாந்தம் பேசுபவர்கள் அதிகமாக இருப்பார்கள்.
இந்த தோஷங்களையெல்லாம் தகர்க்க கலிகாலத்தில் வழி உண்டு என்றால் அது கலியுக தேவதையான பரமசிவனை சரணடைதலே ஆகும்.சிவா பக்தி செய்பவன் மோட்சத்தை அடைவான். முக்தி பெறுவான் " என்று கூறிய வியாச முனிவர் அர்ஜுனனை வழி அனுப்பிவிட்டு காசி ஷேத்ரம் நோக்கி பயனிக்கலானர். தொடரும் .........