காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. எல்லோரும் காலத்துக்காக காத்திருக்கிறார்கள். ஆகையால் காலத்தை நல்ல முறையில் செலவழிக்க வேண்டும். நம்முடைய சரீரத்தில் இருக்கும் ஆத்மாவை ஜீவன் என்று சொல்கிறோம். இந்திரியங்களைவிட மனம் சிறந்தது. மனதைவிட அகங்காரம் சிறந்தது. அகங்காரதைவிட மகத்துவம் சிறந்தது. மனதைவிட அவ்யகதம் மேலானது. அதைவிட புருஷன் மேலானது. புருஷனைவிட பகவானே மேலானவர். ஜகத்ரட்சகனான பகவானை விட அக்னி வடிவான சிவனே எல்லாவற்றையும்விட மகத்துவம் வாய்ந்தவன். அந்த சிவனை ஆராதனை செய்ய செய்ய மாயை அகலும். மாயை அகன்றால்தான் மோட்சம் கிட்டும்.
No comments:
Post a Comment