Friday, March 11, 2011

who am I?

கொஞ்சம்  கூர்ம புராணத்தை பார்ப்போமா?  "ஆத்மா என்பதுதான் கடவுள்.அந்த நித்தியானந்த ஸ்வரூபி எங்கும் எப்பொழுதும் நிறைந்து உள்ளான்.அந்தர்யாமியாக விளங்கும் அவனை அறியாதவர்  உடலை  "நான்" என்று கூறுவர்.இரவும் பகலும் போலவும் நிழலும் வெயிலும் போலவும் ஆத்மாவும் உலகும் வெவ்வேறானது.ஆத்மாவிற்கு மாறுதல் இல்லை. அழிவும் இல்லை. உலகம் மாறிக்கொண்டே இருக்கும். அழிந்து  விடும். நமது ஹ்ருதய கமலத்தில் சுடர் போல் விளங்கும் ஆத்மாவை அக்ஞானம் மறைத்து நிற்கிறது.அதை தவிர்த்தால் ஆத்மாவை தரிசனம் செய்யலாம். மனதை ஒரு நிலைப்படுத்தினால் விரைவில் மாயையை வெல்லலாம். ஆத்மஸ்வரூபத்தை
அறிவதே ஞானம். ஆத்மாவானது  கர்மவசத்தால் உடலைபபெற்று மனதோடு கூடியிருப்பதால் அதை ஜீவன் என்பார்கள்."  தொடரும்........

No comments:

Post a Comment